உலக கோப்பையை வெல்ல இந்திய அணி வீரர் எடுத்த முடிவு! குஷியில் இந்திய ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal



உலகக் கோப்பை போட்டித் தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணியினரும் தங்களது வீரர்களை தேர்வு செய்வதில்  தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி யார் யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2019 மே 30ம் தேதி தொடங்கி, ஜூலை 14ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில், பயிற்சி எடுப்பதற்கும், உடல் நலனை கவனித்து கொள்வதற்கும் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை மட்டும் விளையாடப் போவதாகவும், புவனேஸ்வர் குமார்  தெரிவித்துள்ளார். 

இதனால் கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வலர்களும் புவனேஷ்குமாரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இவரைப் போன்றே மற்ற வீரர்களும் செயல்பட்டால் இந்த வருட உலக கோப்பை இந்திய அணிக்கு தான் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுடன் 5 நாள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. மேலும் இந்த தொடரை கைப்பற்றினால் இந்திய அணி சர்வதேச பட்டியலில் முதல் இடத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

buvanesh kumar for world cup


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->