அஸ்வின் இப்ப மட்டும் அப்டி இல்லை!! அப்பவே அப்டித்தான்! ஆனால் சச்சின், சேவாக்கின் பெருந்தன்மையை பாருங்க!
aswin in old match
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் அணைத்து அணிகளும் கோப்பையை வெல்ல தங்களது பலத்தை நிரூபித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஐபில் போட்டியில் சர்ச்சையாக பார்க்கப்படும் விஷயம் பஞ்சாப் வீரர் அஸ்வின் பட்லரை அவுட் செய்த விதம்தான்.
12 ஆவது ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து ராஜஸ்தான் அணியில் களமிறங்கி அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தார். இந்த செயல் அஸ்வினிக்கு எதிராக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அஸ்வின் செய்த அந்த அவுட் தான் அன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற முக்கிய காரணம் என்றே கூறலாம்.
இந்த நிலையில் மன்கட் முறையில் அவுட் செய்யப்பட்டதை அடுத்து, அஸ்வினுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். ஆனால் இதேபோன்ற மன்கட் விக்கெட்டை அஸ்வின் இலங்கையுடன் நடைபெற்ற போட்டியிலும் இலங்கை வீரர் திரிமண்ணெயை அவுட் செய்தார்.
அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த சேவாக்கிடம் நடுவர்கள் ஆலோசித்தனர். ஆனால் அந்த ஆட்டத்தில் ஆடிய கிரிக்கெட் ஜம்போவான் சச்சினும், அன்றைய ஆட்டத்தின் கேப்டன் சேவாக்கும் வார்னிங் கொடுத்துவிடலாம் என கூறி ஆட்டத்தை தொடங்கினர்.