வரும் ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்! பிசிசிஐ அதிகாரி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்த தொடரில் பேட்ஸ்மேன் சிக்சர் அடிக்கும் பந்தினை மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் ஒரு கையில் கேட்ச் பிடித்தால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பிசிசிஐ தற்காலிக செயல் அதிகாரி அமிதாப் சௌத்ரி கூறுகையில், இந்த வருடம் ஐபிஎல் தொடரில் வீரர்கள் அடிக்கும் சிக்சர்களை ஒரு கையில் கேட்ச் பிடிக்கும் ரசிகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

மேலும் இந்த ஐபிஎல் தொடரில் காண்போரை ரசிக்க வைக்கும் வகையில் பந்தை கேட்ச் பிடிக்கும் அதிர்ஷ்டசாலிக்கு கார் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.

ஐபிஎல் என்றாலே சிக்ஸர் மழை பொழியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனால் ஒவொரு போட்டியிலும் வீரர்கள் அடிக்கும் பந்தினை ரசிகர்கள் பிடித்து பரிசுகளை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2019 ipl price for fan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->