இன்றைய (15.03.19) ராசிபலன்: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? - Seithipunal
Seithipunal


மேஷம்:

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளை வெளிகாட்டுவதற்கான வாய்ப்புகள் அமையும். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதகமான நாள். இணையதள பணியில் உள்ளவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்:

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எண்ணிய எண்ணங்களால் முன்னேற்றம் உண்டாகும். புதிய வர்த்தகம் சம்பந்தமான முதலீடுகள் அதிகரிக்கும்.

மிதுனம்:

வெளியூர் சம்பந்தமான தொழில் முயற்சிகள் கைக்கூடும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விரைவில் முடியும் என எதிர்பார்த்த செயல் பல தடைகளுக்கு பின் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

கடகம்:

மனதில் ஒருவிதமான பதற்றம் உண்டாகும். வாகனப் பயணங்களில் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்ட கால நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். பெண்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். 

சிம்மம்:

பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய ஆடைகளை வாங்கி மனம் மகிழ்வீர்கள்.

கன்னி:

உடல் ஆரோக்கியம் மேம்படும். மூலிகை சம்பந்தமான தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் நீங்கும்.

துலாம்:

புதிய முயற்சிகளில் இருந்து வந்த தடை, தாமதங்கள் அகலும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். இளைய உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணி செய்யும் இடங்களில் மேன்மை உண்டாகும்.

விருச்சகம்:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சுபச் செய்திகள் வந்தடையும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். தாய்மாமனின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும்.

தனுசு:

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். குடும்பத்தில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். எண்ணிய செயல்களை எதிர்பார்த்தப்படி செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு  காண்பீர்கள்.

மகரம்:

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் கைக்கூடும். எண்ணங்கள் சீர்பெறும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நிதானப்போக்கை கடைபிடிக்கவும்.  தடைபட்ட செயலை இனிதே செய்து முடிப்பீர்கள்.

கும்பம்:

பிள்ளைகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். பெற்றோர்களின் உடல்நிலை சீராகும். புதிய வேலை சம்பந்தமான முயற்சிகளில் நற்செய்திகள் கிடைக்கும்.

மீனம்:

உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். தொழில் வளம் பெருகும். புதிய வீடு, மனை வாங்குவதற்கான செயல்திட்டம் தீட்டுவீர்கள். வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

march 15 rasi palan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->