தாவி பாயும் பஸ் கண்டக்டர் - குழந்தையுடன் நின்ற இளம்பெண்ணுக்கு திடீர் அதிர்ச்சி..! வெளியான வீடியோ காட்சி..!
women attacked by bus conductor
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் குழந்தையுடன் வந்த பெண் பயணியை அரசு பஸ் கண்டக்டர் தாக்கும் காட்சி இணையதளத்தில் பரவி வருகிறது.
அந்த பெண் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்திருக்கிறார். சோதனையின் போது சிக்கியுள்ளார். உடனடியாக அபராதம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் அதை கட்டாமல் நடத்துனரை நோக்கி கெட்ட வார்த்தைகளை பேசி செருப்பை தூக்கி வீசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர் அப்பெண்ணை தாக்கியதோடு மட்டுமல்லாது அடிக்க பாய்ந்துள்ளார்.
அதோடு உதைக்க துரத்தி சென்றுள்ளார். இதனை கண்ட சுற்றி இருந்த பொதுமக்கள் நடத்துனரை தடுத்து மேற்கொண்டு விபரீதம் நடக்காமல் பார்த்துக்கொண்டனர்.
இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதனை கண்ட பலரும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் அந்த பெண் தரப்பில் தான் தவறு இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் அடித்தது குற்றம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
women attacked by bus conductor