எதிரிகளையும், எதிர்ப்புகளையும் வெல்ல, இந்த வசிய முத்திரையை செய்து பாருங்கள்…! அற்புதமான பலன் கிடைக்கும்….!
try this 'Mudhra" to conquire the enemies
ஒரு யானை காட்டிற்குள் நடந்து செல்லும் போது, அதற்கு இடைஞ்சல் தரும் செடி கொடி மரங்களை, விலக்க வல்லது அதனுடைய தந்தம் தான். இது விநாயகருடைய கருணையின் சின்னம்.
நீங்கள் செய்து கொண்டிருக்கும், தொழில் மற்றும் வேலையில், எதிரிகளின் இடையூறு இல்லாமல் இருக்க, எல்லா எதிர்ப்புகளையும் தகர்க்க வல்லது, “தந்த வசிய முத்திரை”.
படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளிகள் கூட, இந்த முத்தரையைப் பயன் படுத்தலாம்.
வலது உள்ளங்கையில், கட்டை விரல் தவிர, நான்கு விரல்களையும், மடக்கி வைக்க வேண்டும். அதன் மேல், கட்டை விரலை மடக்கி வையுங்கள் (பார்க்க படம்). பின் நடு விரலை மட்டும் மேல் நோக்கி உயர்த்துங்கள். இப்படிச் செய்யும் போது, உங்கள் மனம் முழுவதும், இந்த முத்தரையில் கவனமாக இருக்க வேண்டும்.
பின் நீங்கள், உங்களுக்கு உள்ள இடையூறுகளை மனதிற்குள் நினைத்துக் கொண்டு, அது விலக வேண்டும், என்று மனதிற்குள் கூறுங்கள். இந்த முத்திரையை, குறைந்தது 9 நிமிடங்கள் வரை, வைத்திருக்க வேண்டும். அதிக பட்சமாக, 48 நிமிடங்கள். அவ்வளவு தான். அதற்கு மேல் வேண்டாம்.
யோகா செய்பவர்கள், சுகாசனத்தில், இந்த முத்திரையைச் செய்யலாம். அது உங்கள், சௌகர்யத்தைப் பொறுத்தது. இந்த முத்திரையை செய்து பாருங்கள். அதன் பலனை, நேரடியாகக் காண்பீர்கள்.
English Summary
try this 'Mudhra" to conquire the enemies