தமிழர்களிடம் மோததே..! இந்த ஆட்சி தேவையற்றது..!! தீர்வு என்னிடம் உள்ளது..!!! சிம்பு ஆவேசம்..!!!
தமிழர்களிடம் மோததே..! இந்த ஆட்சி தேவையற்றது..!! தீர்வு என்னிடம் உள்ளது..!!! சிம்பு ஆவேசம்..!!!
கடந்த 22 ந்தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசார் நடத்திய கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 100 மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
துப்பாக்கி சூட்டைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை வன்மையாக கண்டித்தும், இதற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தி.மு.க. சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்கள் இன்று முழு அடைப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடிகர் சிலம்பரசன், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தனது கருத்தை 2 நிமிட காணொளி மூலம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் தன்னிடம் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னைக்கு தீர்வு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த காணொளியில் அவர் தெரிவித்திருப்பது, "ஸ்டெர்லைட் தொழிற்சாலை பகுதியில் வாழும் மக்களின் உடல்நல ஆரோக்கியம் பாதிக்கக் கூடாது என்று போராடிய அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது என்ன தான் நடக்கிறது? மக்கள் தாங்களாக விரும்பி வாக்களித்த தலைவர் தற்போது, உயிருடன் இல்லை. அவர் எப்படி இறந்தார் என இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இந்த விடயத்தில் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருவது, யாருக்கு தேவை, இதனால் உயிரிழந்தவர்கள் திரும்பி வந்துவிட போகிறார்களா''? என சரமாரியான கேளிவிகளை எழுப்பினார்.
மேலும், ''போராடுவதற்காக மக்கள் கூடும் போது காவல் துறையினர் இப்படிதான் செயல்படுவதா? மாநில அரசு இதுவரை மக்களுக்கு என்ன செய்தது? இந்த அரசு நிச்சயமாக தூக்கியெறியப்பட வேண்டும். பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது கவலையளிக்கிறது. இந்த பிரச்சனையில் தீர்வு காணவே நான் விரும்புகிறேன். என்னிடம் அதற்கான தீர்வும் இருக்கிறது. தமிழர்களுடன் மோத வேண்டாம்." என ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
English Summary
THOOTHUKUDI GUN FIRE ACTOR SIMBU VIDEO RELEASE