கொட்டிக் கொடுக்கப் போகிறார் குரு பகவான் இன்று….! நீங்கள் செய்ய வேண்டியது, இது தான்….!
கொட்டிக் கொடுக்கப் போகிறார் குரு பகவான் இன்று….! நீங்கள் செய்ய வேண்டியது, இது தான்….!
நவகிரகங்களிலே தன்னிகரற்றவர் குரு பகவான் தான். உலகைக் காக்கும் ஈசன் வடிவிலானவர் தான் குரு. நாம் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்திற்கும், நல்ல வழி காட்டுபவரும் இவர் தான்.
அள்ளிக் கொடுக்கும் வள்ளல் குரு பகவான்!
தமிழ் திரை உலகில், இன்று அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும், டைரக்டர் ஷங்கர், தனது படத் தயாரிப்பின் போது, குரு பகவானை வணங்கி விட்டுத் தான், தன் பட வேலைகளைத் துவங்குகிறார்.
மேலும், அவர் எடுத்த படங்களைத் திரையிடுவதும், வியாழக் கிழமை தினங்களில் தான். தற்போது வெற்றிகரமாக வசூலில் உலக சாதனை படைத்துக் கொண்டிருக்கும், 2.0. படமும், வியாழக்கிழமையில் தான் ரிலீஸ் ஆனது.
எனவே, நீங்கள் செய்யப் போகும், புது வியாபாரம், ஃபைனான்ஸ், மற்றும் ரியல் எஸ்டேட் பிசினஸ், இடம் வாங்குதல் விற்றல் போன்றவற்றை இன்று துவங்குங்கள்.
அப்படித் துவங்குவதற்கு முன்பாக, குரு பகவானை மனதில் நினைத்துக் கொண்டு,
“குரு பிரம்மா குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வரஹா,
குரு சாட்சாத் பரத் பிரம்மா, தஸ்மைஸ்ரீ குருவே நமஹ”
என்ற மந்திரத்தை மட்டும் 11 முறை உச்சரித்து விட்டு, பின் உங்கள் காரியங்களைத் துவங்குங்கள்.
வெற்றி நிச்சயம்!
மதுரை ராஜா -