சசிகலா புஷ்பா திருமணத்தில் புதிய சிக்கல்! திருமணம் நடக்குமா?!
சசிகலா புஷ்பா திருமணத்தில் புதிய சிக்கல்! திருமணம் நடக்குமா?!
சசிகலா புஷ்பா திருமணம் செய்ய இருந்த ராமசாமி என்னும் பிரமுகர் ஏற்கனவே திருமணமானவர் என்று அவர் மனைவி சத்யபிரியா மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தையாேடு வந்து புகார் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அரசியல் மற்றும் பிற விவகாரங்களிலிருந்து தள்ளியே இருந்த சசிகலா புஷ்பா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் என்னும் அறிவிப்பை வெளியிட்டு தமிழ்நாட்டையே அதிரவைத்தார். இந்நிலையில் இந்த திருமணம் வரும் 26 ஆம் தேதி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
சசிகலா புஷ்பா -ராமசாமி திருமண வரவேற்பு என்ற செய்திகள் வந்ததை
கண்ட சத்யப்பிரியா என்னும் பெண் கைக்குழந்தையாேடு வந்து, தமக்கும் சசிகலா புஷ்பா திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படும் ராமசாமிக்கும் 2014 ம் ஆண்டே திருமணம் நடைபெற்றதாக மதுரை ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். ஒரு வருடம் மட்டுமே இணைந்து வாழ்ந்ததாக கூறிய சத்யப்ரியா திருமணம் நடப்பது உண்மை தானா என விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
English Summary
problem in sasikala pushpa marriage