திருமாவளவனை விரட்டியடித்த பாதிக்கப்பட்டவரின் தந்தை! திமுக மாவட்ட செயலாளரையும் விரட்டியடிப்பு!
ponparappi issue thirumavalavan
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18 தேதி நடந்த அதிமுக கூட்டணி மற்றும் விசிக மோதலை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் 18 செய்தியாளர் கலைவாணன் மீது விசிகவினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இதில் அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட செய்தியாளாரை சந்திக்க விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக மாவட்டச் செயலர் சிவசங்கர் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர்.
அப்போது ஆவேசமடைந்த செய்தியாளர் தந்தை மூக்கன், நீ எல்லாம் ஒரு ஜாதி கட்சியின் தலைவர், சொந்த ஜாதிக்காரன் மீதே உங்கள் பொறுப்பாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்துகிறார்கள். குடிபோதையில் மாற்று சமுதாயத்தினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக நீ கட்சி நடத்துகிறாய். தலித் சமுதாய மக்களை அடங்க மறு, அத்துமீறு என்று தவறான பாதையில் அழைத்து சென்று எதிர்காலத்தை கேள்விகுறி ஆக்குகிறாய், என்று ஆவேசமாக பேசினார்.
இதனை எதிர்பாராத திருமாவளவன் அங்கு இருந்த தனியார் டிவி செய்தியாளர்கள் மற்றும் முகநூலில் நேரலை செய்த கட்சிக்காரர்களையும் வீடியோ எடுப்பதை நிறுத்த கூறினார்.
மூக்கனின் பேச்சை கேட்டு அதிர்ந்து போன திருமாவளவன் நியூஸ்18 செய்தியாளர் கலைவாணனுக்கு தேவையான செலவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார் அதற்கு செய்தியாளரின் தந்தை மருத்துவ செலவை பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும் உங்கள் வேலையை பார்த்துவிட்டு வெளியே போங்கள் என்று விரட்டி அடித்தார்.
அதனால் செய்வதறியாமல் திருமாவளவன் அமைதியாக மருத்துவமனையை விட்டு வெளியேறினார். கூடவே திமுக மாவட்டச் செயலர் சிவசங்கரும் மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.
English Summary
ponparappi issue thirumavalavan