தமிழகத்தில் பிளாஸ்டிக் முட்டை விற்பனையா..? திரைமறைவில் மேற்கொள்ளப்படும் மோசடி..!
plastic egg sale
இப்போது இந்தியாவையே உலுக்கி கொண்டிருக்கின்ற சம்பவம் உணவு கலப்படம். முதலில் எதோ பிளாஸ்டிக் முட்டை என்ற வடிவில் எட்டி பார்த்தது.
அதற்கு முன்னரே சீனாவில் இருந்து போலி மின்னணு பொருட்கள் வருகிறது அது வேறு விஷயம். ஆனால் இதுவோ மக்களை நேரடியாக பாதிக்க கூடியது. உண்ணும் உணவிலே ஆட்டம் காட்ட கூடிய செயல்.
பிளாஸ்டிக் முட்டை வந்த போது சில இடங்களில் உண்மையும் இருந்தது, சில இடங்களில் வந்தந்தியும் பரவியது. மெல்லிய ஓடு கொண்ட முட்டை இருந்தாலே அது போலி முட்டை என்று சிலர் வாதிட்டனர்.
பின்பு முட்டை வைக்கும் கோழிக்கு உடலில் கால்சியம் சத்து குறைவினால் அவ்வாறான முட்டைகள் இடும் என்று நிரூபித்த பின்னர் அந்த விஷயம் அடங்கி போனது.
விவசாயத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால், திரைமறைவில் மேற்கொள்ளப்படும் மோசடிதான் இந்த உணவு கலப்படம்.
இந்தியாவில் ஒரு மனிதனின் சராசரி உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் அளவில் வேளாண்மை இல்லை என்பது நாடறிந்த ஒன்று. கடன் தொல்லை, மழை இல்லை என பல்வேறு காரணங்களால் விவசாயம் வீழ்ச்சியடைந்து வருகிறது.
பிளாஸ்டிக் அரிசி மட்டுமின்றி, பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் சர்க்கரை என மக்களின் நுகர்வுத் தேவைக்கு ஏற்ப கலப்பட உணவுகள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இக்கிராமத்தை சேர்ந்த விக்டோரியா சின்னப்பராஜ் என்பவர் கடைக்கு சென்று முட்டை வாங்கியுள்ளார்.
அதில் மீதம் இருந்த முட்டைகளை பிரிட்ஜில்வைத்துவிட்டு வியாழனன்று காலை பயன்படுத்துவதற்காக எடுத்துள்ளார். அந்த முட்டையில் மாற்றம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். சாதாரண முட்டைக்கும் அந்த முட்டைக்கும் வித்தியாசம் தெரிந்துள்ளது.
முட்டையை விற்பனை செய்த கடைகாரரிடம் கேட்டபோது அவர் தனக்கு ஒன்றும் தெரியாது எனவும் முட்டைமொத்த வியாபாரியிடம் வாங்கியதாகவும் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.