பெரியாரின் கூட்டம் மதமாற்ற ஏஜெண்டாக மாறிவிட்டனர் : தமிழக அமைச்சரை வறுத்தெடுக்கும் பாஜக தலைவர்..!!
பெரியாரின் கூட்டம் மதமாற்ற ஏஜெண்டாக மாறிவிட்டனர்
பெரியாரின் கூட்டம் மதமாற்ற ஏஜெண்டாக மாறிவிட்டனர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வறுத்தெடுத்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர், தான் படித்த கிறித்தவ பள்ளியில் நேற்று மாணவர்களுடன் உரையாற்றினார். அப்போது, கிறித்தவ பள்ளிகளே ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கிறது என்று கூறியிருந்தார்.
அதற்கு, தான் படித்த பள்ளியை புகழ்ந்து பேசுவது தவறில்லை. ஆனால், கிறித்தவ பள்ளிகள் மட்டும் தான் என்று கூறுவது தவறானது என்று இந்து அமைப்புகள், பாஜகவினர் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில், 'திராவிட புரட்டுப் பூனை வெளியே: அண்ணாதுரை முதல்வர் ஆனவுடன் பள்ளிகளில் இருந்து நீதிபோதனை வகுப்புகளை ஒழித்து ஒழுக்கக்கேட்டை போதித்த ஈ.வெ.ரா கூட்டம் கிறித்தவ பள்ளிகளே ஒழுக்கம் கற்று தருகின்றன என மதமாற்ற ஏஜண்டாக மாறியுள்ளனர். விஜயபாஸ்கரின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது' என்று கூறியுள்ளார்.
English Summary
Periyarists changed as religion change agents