அடடே அசத்தல்..! பேஸ்புக் மார்க் ஸூகர்பெர்க் வீட்டில் விசேஷம்.!  - Seithipunal
Seithipunal


மார்க் ஜுகர்பெர்க் மற்றும் பிரசில்லா சான் தம்பதியினர் தங்களது மூன்றாவது குழந்தையை ஈன்றெடுத்துள்ளனர். நேற்று இந்த குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து தனது சமூக வலைதளங்களின் வாயிலாக  மக்களுடன் பகிர்ந்திருக்கிறார் மார்க்.

2003 ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்து வந்த மார்க் ஸூகர்பெர்க் மற்றும்  பிரிசில்லா சான் தம்பதியினர் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  ஹார்வேர்டு    பல்கலைக்கழகத்தில் இருவரும் ஒன்றாக படிக்கும்போது காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து மண வாழ்க்கையில் இருவரும் இணைந்து  வாழ்ந்து வருகின்றனர்.

இந்த தம்பதியினருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மாக்ஸ்சிமா என்ற பெண் குழந்தை முதலாவதாக பிறந்தது. அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் என்ற பெண் குழந்தை  இவர்களுக்கு பிறந்தது. தற்போது மூன்றாவதாக இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு ஆரேலியா சான் ஜுகர்பெர்க் என பெயரிட்டுள்ளனர். தனது குழந்தையின் புகைப்படத்தையும் அவரது தாயின் புகைப்படத்தையும்  பேஸ்புக்கில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் மார்க்.

மார்க் ஜுகர்பெர்க் பேஸ்புக்கை நிறுவிய  நிறுவனர்களில் ஒருவர் ஆவார். மேலும் இவர் இன்ஸ்டாகிராம் மற்றும்  வாட்ஸ்அப்,பேஸ்புக் ஆகியவற்றை உள்ளடக்கிய மெட்டா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

̓facebook co founder and meta md mark zuckerberg and precila celebrate the birth of third child


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->