தனது அம்மாவை காணவில்லை என தேடி அலைந்த மகனுக்கு, மலைஉச்சியில் காத்திருந்த பேரதிர்ச்சி.!
women murdered by illegal affairs
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகேயுள்ள பெரும்புகை கிராமத்தில் வசித்து வந்தவர் குட்டியம்மாள். சமீபத்தில் ஆடு மேய்ப்பதற்காக வெளியே சென்ற இவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் குட்டியம்மாளின் மகன் கார்த்திக் தனது அம்மாவை காணவில்லை என்று ஊர்முழுவதும் தேடியுள்ளார்.
மேலும் கிராமத்தில் இருந்தவர்களிடம் தனது அம்மாவை பற்றி கார்த்திக் விசாரித்தபோது, குட்டியம்மாள் அப்பகுதியை சேர்ந்த தேவந்திரன் என்பவருடன் சென்றதாக கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து கார்த்திக் தேவேந்திரனிடம் விசாரிக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.ஆனால் அங்கு தேவேந்திரன் இல்லாததால், அவருடைய மனைவியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.
அப்போது அவரது மனைவி தன்னுடைய கணவர் பல பெண்களை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அங்குள்ள மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துவிடுவார் என்று கூறி, வீடியோ ஒன்றை காட்டியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் இரு ஆண்டுகளுக்கு முன்பு சுமதி என்ற பெண்ணை தேவேந்திரன் கொலை செய்யும் காட்சி இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக், தனது அம்மாவை காணவில்லை எனவும், தேவேந்திரன் குறித்தும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பின்னர் தேவேந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.அதில் அவர். இரு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும், சுமதிக்கும் தகாத தொடர்பு இருந்தது. இது என் மனைவிக்கு தெரிந்ததால், அவள் என்னிடம் சண்டை போட்டுகொண்டு அவளது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டாள், இதனால் நான் சுமதியை மலையின் உச்சி பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்தேன். மேலும் அதனை எனது மனைவி நம்ப கொலை செய்ததை வீடியோ எடுத்து எனது மனைவிக்கு அனுப்பினேன் என்று கூறினார்.
மேலும் அதனை போலவே தனக்கு, குட்டியம்மாளுடன் இருந்த உறவு குறித்து தனது மனைவிக்கு தெரிந்துவிட்டதால் அவரையும் அவ்வாறே கொலை செய்தேன் என்று கூறியுள்ளான்.
இதையடுத்து பொலிசார் மலைப்பகுதிக்கு சென்றபோது அங்கு குட்டியம்மாளின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டறிந்தனர்.இதனை தொடர்ந்து போலீசார் தேவேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women murdered by illegal affairs