சொந்த அம்மாவை விட அதிகமாக மனைவியை நேசித்த கணவன் : விவாகரத்து செய்த மனைவி..! இப்படியெல்லாமா நடக்கும்..?
சொந்த அம்மாவை விட அதிகமாக மனைவியை நேசித்த கணவன் : விவாகரத்து செய்த மனைவி..!
உலகம் முழுவதும் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதும், அதனால் விவாகரத்து வாங்குவதும் அதிகரித்துக்கொண்டு வருகிறது.
அதில், சிலர் கூறும் காரணங்களை கேட்டால் இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்கத்தோன்றும்.
பொதுவாக பெற்றோர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு மனைவியை துண்புறுத்துவது, மனைவியை கண்டுக்கொள்ளாமல் இருப்பது போன்ற காரணங்களால் பலர் விவாகரத்து கேட்பர்.
ஆனால், தன்னை அதிகமாக நேசித்ததால் மனைவி விவாகரத்து வாங்கிய நிகழ்வு சவுதி அரேபியாவில் நடந்துள்ளது.
அந்நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் சொந்த அம்மாவை விட தன்னை அதிகமாக நேசிப்பதாக கூறி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதனை விசாரித்த நீதிபதி, இதில் என்ன குறை உள்ளது. எல்லோரும் அப்படிப்பட்ட கணவர் தானே வேண்டும் என்று கேட்பார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அந்த பெண், தன்னை பெற்றெடுத்த அம்மா மீதான பாசத்தையே குறைத்துவிட்டு என்னை அதிகமாக நேசிக்கும் அவர், நாளை என் மீதான பாசத்தையும் குறைத்துவிட்டு வெறுக்க மாட்டார் என்பதில் என்ன உத்தரவாதம் இருக்கிறது? என்று கேட்டுள்ளார்.
இதை கேட்ட நீதிபதி, வேறு எதுவும் கேட்காமல் அந்த பெண்ணுக்கு விவாகரத்து வழங்குவதாக தீர்ப்பளித்தார். மேலும், அந்த பெண்ணையும் பாராட்டியுள்ளார்.
English Summary
Women asks diverse from her husband