ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் மூழ்கடித்து, தனது கணவரின் பிறந்தநாளுக்கு மனைவி கொடுத்த விபரீத பரிசு!
wife suicide at husband birthday
சென்னை சேலையூர் பகுதியில் வசித்து வருபவர் ஜெய்கணேஷ். இவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரவீனா.
இவர்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரதீப் என்ற 4-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை காலை ஜெய்கணேஷின் பிறந்த நாள் விழா குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்பொழுது மனைவி பிரவீனா ஜெய்கணேஷுக்கு சந்தோசமாக கேக் கேக் ஊட்டினார். ஆனால் அன்றே வீட்டில் யாரும் இல்லாத போது பிரவீனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரவீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர்கள் இதுகுறித்து பிரவீனாவின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது ஜெய்கணேஷ் தான் வாங்கும் சம்பளத்தில் பெற்றோருக்கு உதவி வந்துள்ளார். ஆனால் பிரவீனா எதிர்காலத்திற்கு பணம் சேமித்து வைக்கவேண்டும் என பணம் கேட்டு கணவரிடம் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார்.
இவ்வாறு இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த பிரவீனா தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் வெளிவந்தன.
மேலும் ஜெய்கணேஷ் அவரது உறவுக்கார பெண் ஒருவரிடம் தவறான உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இச்சம்பவம் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
wife suicide at husband birthday