பெற்றோர் சம்மதிக்காததால், தற்கொலை செய்த காதலர்கள்!! அதிர்ச்சியில் பெற்றோர்!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே தாளியம்பட் டியை சேர்ந்த கோபி (22), கரூரில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதே ஊரை சேர்ந்த கவிதா (19), கரூரில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கோபி மற்றும் கவிதா ஆகிய இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

சில நாட்களுக்கு, முன்பு பெற்றோர்களுக்கு அவர்களின் காதல் விவகாரம் தெரிய வரவே, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, தாங்கள் இணைந்து வாழ முடியாது என நினைத்த கோபி, கவிதா ஆகியோர் தங்களது வீட்டை விட்டு வெளியேறி, லாலாப்பேட்டை அருகே சிம்மாச்சிப்பட்டியில் உள்ள கோபியின் உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

இந்நிலையில், கோபி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த கவிதா வந்து பார்த்த போது கோபி பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தார். அவரும் வி‌ஷம் குடித்து காதலன் அருகேயே தற்கொலை செய்து கொண்டார்.

கோபியின் உறவினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, பின், உடனே இது குறித்து கோபியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததோடு, அல்லாமல் லாலாப்பேட்டை போலீசிலும் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் லாலாப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suicide for love


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->