பாதிரியார் செய்த வேலையை பாருங்க..! ஒன்றல்ல, இரண்டல்ல எக்கஜக்கம்..!! சாமியார்களை விஞ்சிய பாதிரியார். - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம், ஜெகன்நாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எபிநேசர். இவர் அங்குள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார் என்பது குறிபிடத்தக்கது

இவரது மனைவி பெயர் ஜீவன். எபிநேசர் செயல்கள் சரியில்லை எனக்கூறி அவரது மனைவி ஜீவன் அவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

எபிநேசர் தேவாலயத்திற்கு வரும் விதவைகள், கணவனை பிரிந்து வாழும் பெண்கள் உள்ளிட்டவர்களை சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் எனக்கூறி இரவு நேரத்தில் தனியாக வரும்படி கூறி  தவறான செயல்களில் ஈடுபடுவதாக சுற்று வட்டாரம் கூறுகிறது..

அவ்வாறு வரும் பெண்களை நிர்வாணமாக நின்று பிரார்த்தனை செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் பிரார்த்தனையை கடவுள் மனதார ஏற்பார் எனக்கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியில் சொல்ல பெண்கள் தயக்கம் காட்டி உள்ளனர். ஆனால் இவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது..

இதுபற்றி தகவலறிந்த அவரது மனைவியே பெத்தையாபேட்டை காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார்..

ஆனால், காவல்துறை அதிகாரிகள் எபிநேசர் மீது நடவடிக்கை எடுக்காததால், மாநில மகளிர் நல ஆணைய தலைவி நன்னப்பநேனி ராஜகுமாரியிடம்  நேரடியாக புகார் கூறியுள்ளார்..

இந்த புகாரை பெற்ற அவர், எபிநேசரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதன்பேரில் 5 பெண்கள் எபிநேசர் பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர் என்பது குறிபிடதக்கது..

எபிநேசர் மீது ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அதேபோல் பெண்களிடம் தவறாக நடந்து வந்தாராம்..

இதுகுறித்து அப்பகுதி கிராம பஞ்சாயத்து தலைவர் சத்தியநாராயணா கூறுகையில்,

அவர் கோர்ட் வளாகத்திலேயே ரவுடிகளை வைத்து என்னை மிரட்டினார். அதற்கும் பணியாததால் அவர் என் மீது எஸ்சி, எஸ்டி பிரிவில் கேஸ் போட்டார்

இவர் சமூகத்தில் நல்ல பொறுப்பில் உள்ளதாலும், மீறி புகார் அளிப்பவர்களை ரவுடிகளை கொண்டு மிரட்டுவதாலும் யாரும் இவர் மீது புகார் அளிக்க முன்வரவில்லை மேலும் பயத்தாலும் மக்கள் தயங்குகிறார்கள்..

இதனை பயன்படுத்தி அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என கிராம பஞ்சாயத்து தலைவர் கூறியுள்ளார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

church father give a sexual torture to devotees


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->