இரண்டு மணி நேரத்தில் 244 முறை பாலுறவு.!!!!
இரண்டு மணி நேரத்தில் 244 முறை பாலுறவு
இந்த பகுதியில் உயிரினங்களுக்கிடையே நடக்கும் சில சுவாரசியமான பாலுறவு முறைகளை பற்றி பார்க்கலாம்......
தேனீக்கள் :
ராணித் தேனீக்கு உடலுறவு என்பது வாழ்வில் ஒரு முறைதான். ஒரு முறை பாலுறவு கொண்டவுடன் அந்த ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இடுகிறது.
ஓர் ஆண் தேனீ மட்டும் வீர சாகசங்கள் புரிந்து மற்ற ஆண் தேனீக்களை வென்று ராணித் தேனீயுடன் பாலுறவு கொள்ளும்.
பாலுறவு முடிந்தவுடன் ஆண் குறி உடைந்து பெண்ணுறுப்பிலேயே தங்கிவிடுவதால் இரத்த இழப்பு ஏற்பட்டு இறந்து விடும்.
முடிந்தவுடன் தின்றுவிடும் காதல்:
தேள் மற்றும் சிலந்தி இனங்களில் ஆணும் பெண்ணும் மிகுந்த நேரம் காதல் விளையாட்டுகளில் ஈடுபடும்.
பாலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டவுடன் கர்ப்பம் தரித்த பெண் தேளும், சிலந்தியும் செய்யும் முதல் வேலை, தன்னுடன் காதலில் ஈடுபட்ட துணையை கொன்று சாப்பிடுவதுதான்.
அதிகமுறை பாலுறவில் ஈடுபடும் உயிரினம்:
அதிகமுறை பாலுறவில் ஈடுபடும் விலங்கு "ஷாஜிர்ட்" என்ற பாலைவன எலியாகும்.
இரண்டு மணி நேரத்தில் 244 முறை பாலுறவில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிங்கம்:
ஆண் சிங்கம் 55 மணி நேரத்தில் வெவ்வேறு பெண் சிங்கங்களுடன் 157 முறை பாலுறவு கொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஆண் சிங்கம் இறந்துவிடாது.
மனிதனிடம் விலங்கு குணம்:
மனிதன் தவறான செய்கை என கருதப்படும் பாலியல் பலாத்காரம், பெண்ணை துன்புறுத்தி இன்பம் காணல், பலர் சேர்ந்து இன்பம் காணல் எல்லாம் விலங்கினங்களிலும் உள்ளது.
சில முதலையினங்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றன. பாம்பு மற்றும் பூனை வகைகள் துணையைத் துன்புறுத்தி இன்பமடைகின்றன. தவளைகள் கூட்டுக் கலவியில் ஈடுபடுகின்றன.
பாலுறவில் ஈடுபடும் கழுதையைத் தடுத்தால், அதற்கு வெறி வந்துவிடும். வெறி பிடித்த ஆண் கழுதை கடித்து அல்லது உதைத்து உயிரிழந்தவர்கள் ஏராளம்.
English Summary
Some interesting sex practices between living things