தாயின் ஒரு சொல்லால்,நடுநடுங்கிப்போன மகன்! திருமணமான ஒரேநாளில் காதல்ஜோடி எடுத்த விபரீத முடிவு!
new married couple commit suicide
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அருகேயுள்ள வெண்ணமுத்துப்பட்டி கிராமத்தில் வசித்துவருபவர் பழனியப்பன்-கவிதா தம்பதியினர் . இவர்கள் மகன் பார்த்திபன். இவர் திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கிரேன் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
மேலும் பார்த்திபன் அதேபகுதியைச் சேர்ந்த அனுப்பிரியா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிந்தநிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அனுப்ரியா தஞ்சை மாவட்டம் வேம்படியில் இருக்கும் அவரது அக்கா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பார்த்திபன் வேம்படியில் இருக்கும் அனுப்பிரியாவை சந்திக்கச் சென்றுள்ளார்.அவரை பிடித்த அனுப்பிரியாவின் குடும்பத்தினர் இருவருக்கும் அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடத்தி வைத்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பார்த்திபனின் தாய் கவிதா, தன் உறவினர்களுடன் அங்கு சென்று தனது மகனை அழைத்துள்ளார். அதற்கு அனுப்பிரியாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை கவிதா மகன் பார்த்திபனுக்கு போன் செய்து தான் விஷம் குடித்துவிட்டதாகவும், புது மனைவியோடு சந்தோஷமாக இரு எனவும் கூறியுள்ளார்.
இதை கேட்டு மனமுடைந்த பார்த்திபன், பூச்சிமருந்தை குடித்து தனது திருமணம் நடைபெற்ற கோவில் அருகே மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியுள்ளார்.
இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் பார்த்திபனை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பார்த்திபன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் தனது காதல்கணவன் தற்கொலை செய்துகொண்டதை எண்ணி, மனவேதனையில் இருந்த அவரின் மனைவி அனுப்பிரியா தனது சொந்த ஊரான வெண்ண முத்துப்பட்டிக்கு அழைத்து வரப்பட்டநிலையில் நேற்று மதியம் கையில் கணவர் பார்த்திபனின் புகைப்படத்துடன் வீட்டின் உத்தரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
English Summary
new married couple commit suicide