கணவனை இழந்த தனது தாயின் மோசமான ரகசியத்தை கண்டறிந்த மகன்! அடுத்த சில நாட்களிலே நேர்ந்த பதறவைக்கும் கொடூரம்.!
mother killed son for illegal relationship
ஹரியானா மாநிலத்தில் வசித்து வந்தவர் மீனா தேவி. இவரது மகன் பர்மோத். தனது அப்பா காலமான நிலையில் 23 வயது நிறைந்த அவர் ஜிம் பயிற்சியாளராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் பர்மோத் மர்மமான முறையில் தனது அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனை கண்ட மீனா தேவி கதறி அழுதுள்ளார்.
மேலும் இதுகுறித்து போலீசார் கேட்ட நிலையில், எனது மகன் வேறு அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ கொலை செய்துள்ளனர் நான் காலை எழுந்த பின் தான் அவர் இறந்து கிடப்பதை பார்த்தேன் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மீனா தேவிதான் தனது கள்ளக்காதலன் பிரதீப் என்பவருடன் சேர்ந்து அவரது மகனை கொன்றது கண்டறியப்பட்டது. இதுகுறித்து பிரதீப்பிடம் விசாரித்தபோது தானும், பர்மோத்தும் ஜிம்மில் ஒன்றாக வேலை செய்ததாகவும், அதனை தொடர்ந்து அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்ற நிலையில் பர்மோத்தின் தாயாருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும் இது பர்மோத்துக்கு தெரிய வந்த நிலையில் அவர் தனது தாயை கண்டித்துள்ளார். மேலும் பிரதீப்பை இனி எனது வீட்டிற்கு வரக்கூடாது எனவும் கூறியுள்ளார் .
இந்நிலையில் தனது கள்ள உறவுக்கு தடையாக இருக்கும் தனது மகனை கொல்ல திட்டமிட்ட மீனா இதுகுறித்து பிரதீப்பிடம் கூறியுளளார். பின்னர் பிரதீப் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பர்மோத்தை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியுள்ளனர். இதையடுத்து போலீசார் மீனா, பிரதீப் மற்றும் அவரது நண்பர்களை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.
English Summary
mother killed son for illegal relationship