2 வயது மகனை கொடூரமாக கொன்றுவிட்டு, தாய் செய்த விபரீதம்! கடிதத்தின் மூலம் வெளியான அதிர்ச்சி காரணம்! - Seithipunal
Seithipunal


புனே மாநிலம் ஹதாஸ்பார் பகுதியில் வசித்து வருபவர் அமித் காம்ப்ளே. இவர் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜான்வி4 வருடங்களுக்கு முன்பு திருமணமான  இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஷிவான்ஸ் என்ற மகன் உள்ளான்.

மேலும் திருமணம் முடிந்ததிலிருந்தே அமித்தின் தாய் சுஜாதா, மருமகள் ஜான்வியை மிகவும் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், சமீபத்தில் கணவர் வேலைக்கு சென்ற பின்னர் ஜான்வி தனது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

        

இதனை பற்றி அறிந்து கொண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாய் மற்றும் மகனது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் சுஜாதாவின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், வீட்டில் ஆய்வு நடத்திய போது தன்னுடைய கணவருக்கு ஜான்வி எழுதியிருந்த ஒரு கடிதம் கிடைத்துள்ளது.

அதில் அமித்.. நீங்கள் என்னை அதிகம் நேசிக்கிறீர்கள். ஆனால் எனக்கான போதிய நேரம் ஒதுக்கவில்லை. மேலும்  உங்கள் தாய் சுஜாதாவால் நான் வாழ்க்கை மீது பெரிதும் வெறுப்படைந்துவிட்டேன். அவர் என்னை தினமும் கொடுமைப்படுத்துகிறார். எனவே வாழப்பிடிக்காமல் இந்த முடிவுக்கு வந்தேன்” என்று உருக்கமாக எழுதி இருந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mother killed son and commits suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->