இருகுழந்தையையும் துடிதுடிக்க கொன்ற கொடூர தாய்! கடிதம் எழுதிவைத்துவிட்டு எடுத்த விபரீத முடிவு.! கதறும் உறவினர்கள் .!
mother killed children and commits suicide
கப்பலூர் பாதிரிகுப்பத்தில் வசித்து வந்தவர் மதிவாணன். இவரது மனைவி சிவ சங்கரி. இவர்களுக்கு பாவேஷ் கண்ணா என்ற 12 வயது மகனும், ரதீஸ் கண்ணா என்ற 8 வயது மகனும் உள்ளனர்.
இந்நிலையில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த மதிவாணன் மற்றும் சிவசங்கரி தம்பதியினருக்கு இடையே சமீபகாலமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் ஆத்திரமடைந்த மதிவாணன் வீடிருந்து வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சிவசங்கரி தனது இரண்டு மகன்களுக்கும் தூக்க மாத்திரை கொடுத்துள்ளார்.
இருவரும் மயங்கியதும் அவர்களை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் . பின்னர் அவர்களுக்கு நல்ல உடையணிந்து ஒப்பாரி வைத்து அழுதுள்ளார். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் கணவன் மனைவி சண்டையில் அழுவதாக நினைத்துள்ளனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு பின் வீட்டிற்கு வந்து மதிவாணன் கதவை தட்டியும் திறக்காததால் பக்கத்து வீட்டார்களும் கூடி உள்ளனர்.
பின் கதவை திறந்து அவர்கள் உள்ளே சென்றபோது சிவசங்கரி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். மேலும் அந்த கடிதத்தில், என் கணவர் பொறுமை சாலி, அதனால் என்னுடன் வாழ்கிறார். என்னால் கோபபடாமல் இருக்க முடியவில்லை.
என் கணவருக்கு நானோ குழந்தைகளோ இனி தொந்தரவு கொடுக்க மாட்டோம். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளார்.
ஆனால் சிவசங்கரியின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
English Summary
mother killed children and commits suicide