பல ஆண்களுடன் தகாத உறவு, உண்மை தெரிந்து வெளிநாட்டிலிருந்து வந்த கணவன் எடுத்த விபரீத முடிவு!
பல ஆண்களுடன் தகாத உறவு, உண்மை தெரிந்து வெளிநாட்டிலிருந்து வந்த கணவன் எடுத்த விபரீத முடிவு!
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி இவரது மனைவி ராணி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ரவி சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் விடுமுறை கிடைத்து வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் சண்டையாக மாறியது,
இந்நிலையில் ரவி, தனது மனைவியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
சிறிதுநேரத்தில் தனது மகனுக்கு போன் செய்து, அம்மா வண்டியில் இருந்து வீழே விழுந்துவிட்டார் உடனடியாக வா என அழைத்துள்ளார். அங்கு தலையில் காயத்துடன் ராணி இறந்து கிடந்தார்.
மேலும் அவரது மகனும் தாய் வண்டியில் இருந்து விழுந்து இறந்துவிட்டதாக கருதி, இருசக்கர வாகனத்திலேயே உடலை வீட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் ராணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ராணியின்அண்ணன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் ரவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ரவி முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் நான் வெளிநாட்டில் இருந்தபோது, எனது மனைவி, இங்கு பல ஆண்களுடன் சுற்றித்திரிவதாக ஊர்மக்கள் பேசினர். இதுகுறித்து எனது மனைவியிடம் விசாரித்தபோது அவள் சரியான பதிலளிக்கவில்லை.இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் ராணியை வெளியே அழைத்துச் செல்லும்போது அவளது தலையில் கல்லால் அடித்து கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man kill his wife for her illegal relationship