5 மணி நேர போராட்டம்! மனைவி, பிள்ளைகளின் கண்முன்னே உடல் சிதற தற்கொலை செய்துகொண்ட நபர்!
man commit suicide by falling from tower in thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டம் ஏந்துவாம்பாடி கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ். இவரது மனைவி கீதா. இவருக்கு கிரிஜா மற்றும் ஆரியா என்ற இரு பெண்குழந்தைகள் உள்ளன.
இவர் தனது உறவினருடன் சேர்ந்து சென்னையில் சென்டரிங் வேலைசெய்து வந்துள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு விடுமுறை எடுத்து வந்த ரமேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை தொடர்ந்து ரமேஷ் மற்றும் கீதா இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் தனது கிராமப்பகுதியில் உள்ள 200 அடி உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்ய முயன்றார். மேலும் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் செல்போனில்தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்
ரமேஷிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.மேலும் அவர் மனைவி மற்றும் குழந்தைகள் அவரை செல்போனில் தொடர்புகொண்டு கீழே இறங்க கேட்டு கெஞ்சி கதறியுள்ளனர்.
மேலும் தீயணைப்பு துறையினர் உயர் மின்கோபுரத்தில் பாதிவரை ஏறினர். ஆனால் ரமேஷ் அருகில் வந்தால் குதித்துவிடுவேன் என்று மிரட்டியதால் ஒன்றரை மணிநேரம் மின்கோபுரத்தின் மேலே நின்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பின்னர் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரமேஷ் கீழே குதித்து தலை மின்கோபுர கம்பியில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதைநேரடியாக பார்த்த அவர் மனைவியும் குழந்தைகளும் கதறி அழுதுள்ளனர்.
English Summary
man commit suicide by falling from tower in thiruvannamalai