உனக்காக உயிரை கொடுப்பேன் என்று சொல்லியது போலவே..! காதலியின் வீட்டுமுன் செய்து காட்டிய காதலன்..!!
உனக்காக உயிரை கொடுப்பேன் என்று சொல்லியது போலவே..! காதலியின் வீட்டுமுன் செய்து காட்டிய காதலன்..!!
ஃபேஸ் புக்கால் ஏற்பட்ட காதல்….தற்கொலை முயற்சி செய்த காதலன் உயிர் ஊசலாடுகிறது…
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 27) டிப்ளமோ படித்த இவர், கரூரில் தனியார் டயர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஃபேஸ்புக் மூலம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த சீதா (வயது 23) என்ற பெண் இவருக்கு அறிமுகமானார். சீதா எம். காம். வரை படித்துள்ளார்.
ஃபேஸ்புக் வழியாக அறிமுகமான, இவர்களது நட்பு, நாளடைவில் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்துக் கொண்டனர்.
சுரேஷ்குமார் தனது காதலை, தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அவர்களும், அவரது காதலை ஏற்று, அவர் காதலிக்கும் பெண்ணையே, மணம் முடித்து தருவதாகக் கூறி உள்ளனர்.
பின், 15 நாட்களுக்கு முன்பாக, சுரேஷ்குமார், முறைப்படி தன் பெற்றோருடன், சீதா வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சீதாவின் பெற்றோர், பெண் தர மறுத்தனர்.
அத்துடன், சீதாவின் பெற்றோர், நிலக்கோட்டை காவல் நிலையத்தில் வாய் மொழியாகப் புகார் அளித்துள்ளனர். இதனால், நிலக்கோட்டை எஸ்.ஐ. ஆனந்தி, சுரேஷ்குமாரை, எச்சரித்து அனுப்பி உள்ளார்.
இதற்கிடையே, சீதாவின் பெற்றோர் அவருக்கு, வேறு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதைக் கேள்விப்பட்டு, நேற்று, நிலக்கோட்டைக்கு சீதா வீட்டிற்கு வந்த சுரேஷ்குமார், சீதாவைச் சந்திக்க வேண்டும், என்று கூறி உள்ளார்.
அதனால், கோபம் அடைந்த, சீதாவின் பெற்றோர், சுரேஷ்குமாரை அடித்து விரட்டி உள்ளனர். இதனால், மனமுடைந்த சுரேஷ்குமார், தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால், தன் வயிற்றில் சராமரியாகக் குத்திக் கொண்டார். அப்படியே மயங்கி சாய்ந்தார்.
அக்கம் பக்கத்தினர், அவரை மருத்துவனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இது குறித்து, போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.