ஆத்திரத்தில்..!! கணவனின் கள்ளக் காதலி மகளைக் கொன்ற மனைவி..!! - Seithipunal
Seithipunal


ஆத்திரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், கணவனுடைய கள்ளக் காதலியின் மகளைக் கொன்ற மனைவி..

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள கருமாண்டி செல்லி பாளையத்தில் வசித்து வந்தார், வனிதா (வயது 33). இவர் 2009-ல் வேறு சமூகத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 35) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் வசித்து வருகிறார், கனகா என்பவர். இவரது கணவர் சண்முகநாதன். இவர்களுக்கு கனி (வயது 7) என்ற பெண் குழந்தை உள்ளது.

சண்முகநாதன் குடி போதைக்கு அடிமையாகி, குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் என்ற முறையில், கனிகா, கமலக் கண்ணனிடம் சகஜமாகப் பேசிப் பழகி உள்ளார். நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறியது. 

கனிகாவின் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்துள்ளார், கமலக்கண்ணன். கனிகாவின் மகள் கனியைத் தனது மகள் போல் பாவித்து, செலவு செய்திருக்கிறார். இதனால், கமலக்கண்ணனுக்கும், அவரது மனைவி வனிதாவிற்கும் அடிக்கடி தகராறு நடந்துள்ளது.

கணவனின் கள்ளக் காதலால், ஆத்திரத்தில் இருந்த வனிதா, கனிகாவின் குழந்தையைத் துாக்கிச் சென்று, யாரும் இல்லாத இடத்தில், அந்தக் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து விட்டார். இதனை அந்த தெருவில் வசித்த மூதாட்டி பார்த்து விட்டார்.

தற்போது, வனிதாவைப் போலீசார் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர். எந்த பாவமும் அறியாத 7 வயதுக் குழந்தையைக் கொன்ற சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ILLEGAL RELATIONSHIP BABY WAS KILLED


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->