தூங்கிக்கொண்டிருந்த மனைவியை, 40 முறை கொடூரமாக குத்தி கொலை செய்த கணவன்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்.! - Seithipunal
Seithipunal


அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் வசித்து வருபவர் பங்கஜ். இவரது மனைவி வன்ஷிகா சர்மா. இவர்கள் இருவருக்கும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களிலிருக்குதே பங்கஜ் மற்றும் வன்ஷிகா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மேலும் அதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தொடர்ந்து பிரச்சினைகளும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வன்ஷிகா சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அனைவரின் முன்பும் கணவர் பங்கஜை அவமதித்து வந்துள்ளார்.

   

 

இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் பங்கஜ்,  தனது உதவியாளர் நசீம் அகமது என்பவருடன் சேர்ந்து வன்ஷிகாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த வன்சிகாவின் தலையில் கார் ஸ்பானரைக் கொண்டு பலமாகத் தாக்கியுள்ளார். மேலும் அவரது கோபம் தீர வயிறு மற்றும் உடலின் அனைத்து பக்கங்களிலும் 40 முறை கொடூரமாக குத்தியுள்ளார். இதில ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த வன்ஷிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

பின்னர் இதுகுறித்து வன்ஷிகாவின் தந்தை போலீசாரிடம் அளித்த புகாரின்பேரில் பங்கஜையும் அவரது உதவியாளர் நசீம் அகமதுவையும் போலீசார்  கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband killed wife for insulting him


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->