தூங்கிக்கொண்டிருந்த மனைவியை கொடூரமாக தீர்த்துக்கட்டிய கணவர்! கூறிய இரத்தம் உறையவைக்கும் அதிர்ச்சி காரணம்!!
husand killed wife while sleeping
பஞ்சாப் மாநிலத்தில் அனந்த்பூர் சாஹிப் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ராகேஷ் குமார்.இவரது மனைவி அனிதா ராணி.இவர்களுக்கு திருமணமாகி 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று ராஜேஷ்குமார் ஆசைப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அனிதாராணி கர்ப்பமாக இருந்த நிலையில்அவர்கள் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் ஐந்தாவதாக பெண் குழந்தை பிறந்தது. இதனால் ராகேஷ் குமார் மிகவும் மனம் வெறுத்து காணப்பட்டுள்ளார்.
அடுமட்டும்நன்றி தனக்கு ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காத மனைவியின் மீதும் கடும் கோபத்தில் இருந்துள்ளார். மேலும் அவருடன் அடிக்கடி தகராறும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராகேஷ் குமார் சமீபத்தில் குழந்தைகள் அனைவரையும் ஒரு அறையில் படுக்க வைத்து விட்டு, நன்கு தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மேலும் பிறகு தனது கழுத்தை வெட்டிக்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். பின்னர் தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார்கள் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர், ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது மீண்டும் ஐந்தாவதும் பெண் குழந்தையாக பிறந்தது. இந்த கோபத்தின் காரணமாக தனது மனைவி அனிதாராணியை கொலை செய்துவிட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
husand killed wife while sleeping