எக்சேஞ் ஆஃபரில் மனைவியை மாற்ற நினைத்த அண்ணன் தம்பி! தம்பியின் வெறித்தனத்தால் நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாக இளைஞர்களிடம் காதல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனாலும் சில காதல் எளிதில் கை கூடுவதில்லை. சிலர் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய வீட்டை வெளியே சென்று விடுகின்றனர். சிலர் நண்பர்களாக பிரிந்து விடுகின்றனர். ஆனால் தற்போது கள்ளகாதல்தான் மிக அதிகமாக அரங்கேறி வருகிறது. 

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷால், இவரது மனைவி பெயர் லட்சுமி (23). விஷாலுக்கு யோகேந்திரா என்ற தம்பி ஒருவர் உள்ளார். யோகேந்திராவின் மனைவி பெயர் சோனு. கடந்த சில மாதங்களாக தம்பி யோகேந்திராவுக்கு அண்ணன் மனைவி லட்சுமி மீது காதல் ஏற்பட்டுள்ளது. அதே போல் தம்பியின் மனைவியான சோனு மீது அண்ணன் விஷாலுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. 

பின்னர், இருவரும் தங்களது மனைவியை மாற்றி கொள்ள தீர்மானித்தனர். அதாவது விஷாலின் மனைவி லட்சுமியை தம்பிக்கும், யோகேந்திராவின் மனைவி சோனுவை அண்ணனுக்கும் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.


இந்த முடிவில் அண்ணன் விஷாலின் மனைவி லட்சுமி மறுப்பு தெரிவித்தார். விஷாலின் தம்பியான யோகேந்திரா தனக்கு அண்ணன் மனைவி லட்சுமி கிடைக்காமல் போய்விடுவாளோ என்ற விரக்தியில், அண்ணனும், தம்பியும் சேர்ந்து லட்சுமியை கொலை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் விஷால் மற்றும் யோகேந்திரா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brother of brother who wanted to change his wife in the exclusive offer! Sadness of brother's frenzy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->