கர்பமாக்கிவிட்டு காணாமல் போன காதலன்!! பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!  - Seithipunal
Seithipunal


நிலக்கோட்டை  ஸ்ரீரங்கபட்டியை சேர்ந்த பெண் ஒருவரை அதே ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்ற முயன்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் ஒரு மைனர் பெண், அவர் அதே ஊரை சேர்ந்த 22 வயதுள்ள சந்திரசேகர் என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார். பின்னாளில், இது காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளனர்.

அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து விட்டு பலமுறை  மைனர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பின்னர் பரிசோதனை செய்ததில் அவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், செய்வதறியாது திகைத்தனர். 

பின்னர் சந்திரசேகரிடம் சென்று தனது பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளனர். ஆனால் சந்திரசேகர் இதற்கு மறுத்துவிட்டார். மறுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் நிலக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் சந்திரசேகரின் மீது புகார் அளித்துள்ளனர். 

இன்ஸ்பெக்டர் பேபி சந்திரசேகர் மற்றும் அவரது செயலுக்கு உடந்தையாக இருந்த தாய் சந்திரிகா, தந்தை செல்வக்குமார் ஆகியோர் உட்பட 3 பேர் மீதும் வழக்கு தொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A boy cheated a minor girl in nilaikottai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->