17 வயது மகனை கடத்தி சென்ற 22 வயது பெண்! திருமணம் செய்துவிட்டு பெற்றோர் சம்மதம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்!
17 வயது மகனை கடத்தி சென்ற 22 வயது பெண்! திருமணம் செய்துவிட்டு பெற்றோர் சம்மதம் கேட்டு மிரட்டல் விடுத்த பெண்!
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனது 17 வயது மகனை 22 வயது பெண் ஒருவர் கடந்த அக்டொபர் மாதம் கடத்தி சென்று விட்டார். சில நாட்கள் கழித்து என் வீட்டுக்கு அந்த பெண் தனது பெற்றோருடன் வந்து, உங்கள் மகனோடு திருமணம் செய்து விட்டேன் எனவும், உங்கள் வீட்டில்தான் தங்க போகிறோம் என்று கூறினார். இதற்கு நானும் என கணவரும் எதிர்ப்பு தெரிவித்தோம்.
இந்நிலையில், வீட்டில் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்னை காயப்படுத்தி கொள்வேன் என மிரட்டினார். பின்னர், அன்று இரவே வீட்டை விட்டு வெளியேறினார். என் மகனும் அந்த பெண்ணுடன் சென்று விட்டார். என் மகனின் மனதை மாற்றி அந்த பெண் கூட்டி சென்றுவிட்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டுமுறை விவாகரத்து ஆகியுள்ளது. என் மகனும், அந்த பெண்ணும் இரண்டு வருடங்களாக பழகி வந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த போலீசார், அந்த பெண்ணிடம் கேட்டபோது, நாங்கள் இருவரும் விருப்பத்தோடு திருமணம் செய்து கொண்டுள்ளோம். இப்போது எங்களுக்கு ஐந்து மாதத்தில் குழந்தை ஒன்று உள்ளது, என்றார்.
பின்னர் அந்த பெண்ணை போக்ஸோ சட்டத்தின் கீழ் அந்த பெண் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அந்த பெண், குழந்தை தன்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.
அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. தற்போது அந்த இளம்பெண் தன் குழந்தையுடன் மீண்டும் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
English Summary
22-year-old girl kidnapped by a 17-year-old son The girl who married and threatened to ask parents to marry!