அவர் முதல்ல உளறாம பேசட்டும்.,அப்பறம் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம்.,வாய்ப்பூட்டு போட்ட சிவசேனா..!
பாஜக எம்.பி.க்கள் அனைவரும் மோடி பேசுவதைப் பார்த்து, அவரைப் பின்பற்றி அப்படியே பேசுகிறார்கள்.
சமீப காலமாக பா.ஜ.க தலைவர்கள் சிலரின் பேச்சு சர்ச்சையைகிளப்பும் விதமாக இருந்தது அதனால் பிரதமர் மோடி, தனது நமோ ஆப்ஸ் மூலம், பாஜக எம்.பி.க்களுக்கு அறிவுரை கூறினார்.
அதில், எம்.பி.க்கள் எந்த விஷயத்தையும் ஆய்வு செய்யாமல், பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது. நாம் தொடர்ந்து தவறுகள் செய்வதன் மூலம் ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகிறோம்.
ஊடகங்களின் முன்பாக ஏதோ விஞ்ஞானிகள் போலவும், ஆய்வாளர்கள் போலவும் நீங்கள் பேசும் வார்த்தைகள் பிரச்சினையில் சிக்க வைக்கிறது.அதனால் கட்சியின் பெயருக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுகிறது என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சிவசேனா கட்சி, "இதுபோன்ற அறிவுரைகளைப் பிரதமர் மோடி தனது எம்.பி.க்களுக்கு பல முறை கூறியிருக்கிறார்.ஆனால் அவர்கள் கொஞ்சமும் மாறாமல் மோடி போலவே பேசுகிறார்கள்.
அதாவது பிரதமர் மோடி தனது சிந்தனையில் என்ன தோன்றுகிறதோ, அதை ஆய்வு செய்யாமல் அப்படியே பேசுவார் ,அதேபோல் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் மோடி பேசுவதைப் பார்த்து, அவரைப் பின்பற்றி அப்படியே பேசுகிறார்கள்.
மேலும் மோடியின் பேச்சு ஊடகங்களின் செய்திக்கு மசாலா சேர்ப்பது போன்று தான் இருக்கிறது. ஆனால் இப்போது, ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் ஊடகங்களுக்குக் கூடுதல் மசாலாவும், ஊறுகாயும், அப்பளமும் தருகிறார்கள். என்று தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தெரிவித்துள்ளார்.
English Summary
you first talk properly sivasena against modi