சந்தேஷ்காளியில் பெண்கள் மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டுள்ளன - அமித் ஷா குற்றசாட்டு!!
Women harassed on religious grounds in Sandeshkhali Amit Shah alleges
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இன்று 95 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிலைபெற்று வருகிறது. நேற்று இந்தநிலையில், பீகார் மாநிலம் சமஷ்டிப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு காங்கிரஸ் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது.
2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. அப்போது நாட்டின் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து அந்த கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளியில் பெண்களை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். பெண்கள் மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.
English Summary
Women harassed on religious grounds in Sandeshkhali Amit Shah alleges