ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? கலங்கும் தொண்டர்கள்.!!! கவலைப்படாத எடப்பாடி.!!! - Seithipunal
Seithipunal


பெரம்பலூரில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

இதன் அருகே அரசு மருத்துவமனையும் இருப்பதால், இந்த உணவகத்தை அதிகப்படியான பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த உணவகத்தின்  பூட்டை உடைத்து உள்ளே  புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த பொருட்களை சேதப்படுத்தி இருக்கிறார்கள்.

அதனோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்தை கிழித்து எறிந்துள்ளனர்.

உணவகத்தில் சேதப்படுத்தப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 1 லட்சம் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு அதிமுக தொண்டர்களிடையே பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஆட்சியில், அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கி, ஜெயலலிதா  படத்தை கிழித்தவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. 

எடப்பாடி இதை பற்றி கவலைப்படவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் இதுமாதிரி நடந்திருக்குமா? என்று அதிமுக தொண்டர்கள் கொந்தளிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amma restaurant operated in Perambalur is looted by mysterious people


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->