இந்திய நாட்டின் மகாத்மாவே.! மோடியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள்.!! முதல்வர் பிராத்தனை.!!
west Bengal cm press meet
இந்திய திருநாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அவர்களிடம் இருந்து, இந்திய திருநாட்டை காப்பாற்றுமாறு, மேற்கு வாங்க முதல்வர் பிரதனை செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மொத்தம் 22 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி பாராளுமன்ற வளாகத்துக்கு சென்ற மம்தா பானர்ஜி, அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி, ’இன்றுடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைகிறது. இன்றுதான் கடைசி நாள். எனவே, மத்திய ஆட்சியில் இருந்து பா.ஜ.க. மற்றும் மோடியை அகற்றி ,இந்த நாட்டை காப்பாற்றி, எல்லோரையும் பாதுகாக்குமாறு காந்தி சிலை முன்னர் பிரார்த்தித்தோம்’ என்று பேட்டியளித்துள்ளார்.
English Summary
west Bengal cm press meet