சொத்துகுவிப்பு வழக்கில் திமுக எம்எல்ஏ-வுக்கு சிறை..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
திமுக முன்னாள் எம்எல்ஏ-வுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
திமுக ஆட்சி காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, நேரு உள்பட பலர் மீது வழக்குகள் தொடரப்பட்டது.
முன்னாள் திமுக எம்எல்ஏ மாரிமுத்து 1996-2001 வரை வானூர் தொகுதியில், திமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்தார். அந்த நேரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி மாரிமுத்து மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் திமுக எம்எல்ஏ மாரிமுத்துவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டணை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பான இந்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பின் படி திமுக முன்னால் எம்எல்ஏ மாரிமுத்து, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Vilupuram District Court Judgement For Income Former DMK MLA