பொதுமக்களை கொலை நடுங்க வைத்த திமுக குண்டர்கள்.! வேலூரில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, கம்னியூஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

திமுகவின் வெற்றியை பறிக்கும் விதமாக கடந்த இரு தினங்களுக்கு முன் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் வீடு மற்றும் குடோனில்  நடந்த வருமானவரி சோதனையில் வாக்காளர்களுக்கு கொடுக்க தயாராக இருந்த கட்டு கட்டான பல கோடி ருபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. 

இதனால் திமுகவின் தலைமை அதிர்ச்சில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே திமுக குண்டர்கள் பிரசாரத்தின்போது பைக் ரேசில் ஈடுபட்டதை கண்ட பொது மக்கள், வாகன ஓட்டிகள் தங்களின் உயிரை கையில் பிடித்து கொண்டு பயத்தில் நடுங்கிப்போய் நிர்கதியை நின்றனர்.

திருவண்ணாமலை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை க்கு ஜோலார்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்ட போது அவருடன் வந்த திமுக தொண்டர்கள் என ஏராளமானோர், சட்டவிதிகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் ரேசில் ஈடுபட்ட சம்பவம் பொது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொது மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில், அட்டூழியத்தில் ஈடுபட்ட திமுக கட்சி ரவுடி குண்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். 

நன்றி காணொளி நியூஸ் ஜெ


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VELLORE DMK ELECTION CAMPAIGN WORST INCIDENT


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->