வைகோ பரபரப்பு அறிக்கை.! கழகத்தின் வரலாற்றில் 27 வது முறையாக நடக்கப்போகும் நிகழ்வு.!!  - Seithipunal
Seithipunal


வரும் ஆறாம் தேதி, சென்னையில் மதிமுகவின் 27-வது பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

இது சம்மந்தவமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ''ம.தி.மு.க. பொதுக்குழு வருகிற 6-ந்தேதி கூடுகிறது. இதில் கட்சியின் கொள்கை கோட்பாடுகள், நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் களங்களைச் சந்திக்கும் அணுகுமுறை, கழகத்தின் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது.

வரும் 6-ம் தேதி காலை 10 மணி அளவில், நடைபெறும் ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்குகிறார். சென்னை அண்ணாநகரில் உள்ள விஜயஸ்ரீ மகாலில் இந்த பொதுக்குழுகூடுகிறது.

இதில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. பொதுக்குழுவில் பங்கேற்க வருபவர்கள் அழைப்பிதழ்களை கொண்டு வரவேண்டும்.

கழக வரலாற்றில் நடைபெற இருக்கும் 27 -வது பொதுக்குழு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் என்பதைக் கருத்தில் கொண்டு பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறேன்'' என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VAIKO NEW ANNOUNCEMENT


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->