அந்த ஆளு "ஆட்டுக்குட்டி புழுக்கைக்கு" சமம்..போட்டு தாக்கிய உதயநிதி.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை 29 பைசா மோடி என விமர்சனம் செய்து வரும் நிலையில் அதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினை கஞ்சாநிதி என விமர்சனம் செய்து வருகிறார். 

இதனால் உதயநிதிக்கும் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் அது பிரச்சார காலத்திலும் எதிரொளித்து வருகிறது. நேற்று தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டார்.

அந்த வகையில் தஞ்சாவூர் தொகுதிக்குட்பட்ட பட்டுக்கோட்டையில் நேற்று உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயரை கூட்டத்தில் இருந்தவர்கள் எழுப்பியுள்ளனர். 

இதனால் கடுப்பான உதயநிதி ஸ்டாலின் "அந்த ஆள் பெயரையெல்லாம் சொல்லாதீங்க அந்த அளவுக்கு அந்த ஆளு வொர்த்தே இல்ல.. அந்த ஆளு ஆட்டுக்குட்டி புழுக்கைக்கு சமம்" என கடுமையான சொற்களால் விமர்சனம் செய்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த பேச்சால் கொந்தளித்து போன பாஜகவினர் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது தனிநபர் தாக்குதல் மற்றும் கடுமையான சொற்களை பயன்படுத்தக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்த நிலையில் உதயநிதி இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanithi criticized annamalai with harsh words


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->