இதையாவது எங்களுக்கு உடனடியாக தாருங்கள் : மன வேதனையில் புலம்பிய தினகரன்!
மன வேதனையில் புலம்பிய தினகரன்!
காவிரி பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பை வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது கர்நாடக விவசாயிகளுக்கு சாதகமாவும், தமிழக விவசாயிகளுக்கு பாதகமாவும் உள்ளது.
தமிழகம் கூடுதல் தண்ணீரை கேட்ட நிலையில் ஏற்கனவே கொடுத்ததையும் குறைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டிருப்பதாவது, காவிரி வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. இத்தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழகத்தில் பாசன பரப்பின் அளவு, இருபோக விவசாயம் தற்போது கேள்வி குறியாகியுள்ளது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது மற்றொரு டிவிட்டில் எனினும் தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீரின் அளவையாவது கர்நாடக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். அதனை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
ttv dinakaran tweet about cauvery issue