ஆளுநர் நல்ல முடிவெடுப்பார்., யாரும் இதில் அரசியல் செய்யாதீர்கள்., தினகரன் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய வழக்கு கடந்த 06 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்னும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.  
 
இதையடுத்து, கடந்த 9 ஆம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது," பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு, தமிழக அமைச்சரவை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து,  7 பேர் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு பரிந்துரைத்து, எழுத்துபூர்வமாக நேற்று ஆளுநரிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது.  

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் இரு தினங்களுக்கு முன் தமிழக ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும்,  இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அமமுக-வின் துணை பொது செயலாளர் தினகரன் செய்திளார்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ''முறையான முன்னேற்பாடுகளை செய்யாததே மின்தட்டுப்பாட்டுக்கு காரணம்'' என்று தமிழக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV DINAKARAN OPEN TALK ABOUT 7 PEOPLE RELEASE


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->