இப்படி பண்றீங்களே......உங்களுக்கு வெட்கமாக இல்ல? : இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் மீது சாடிய தினகரன்! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கித் தந்த ஆட்சி என்பதையே மறந்து விட்டு வடக்கு நோக்கி கைகூப்பி கும்பிடுபோட்டு ஆட்சி நடத்துவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தரப்பின் மீது சீறி பாய்ந்துள்ளார் டிடிவி.தினகரன்.

டிடிவி.தினகரன் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் என்ற பெயரில் நாளை முதல் மாவட்ட வாரியாக தனது தொண்டர்களை சந்திக்க இருக்கிறார். இந்த பயணத்தை முதலில் தஞ்சையில் இருந்து தொடங்க போவதாக அறிவித்திருக்கிறார். 

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தின் அருகே டிடிவி.தினகரன் தலைமையில் மிக பிரம்மாண்டமான கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தினகரன் கூறுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அனுமதி அளிக்க  மறுத்த அனைத்து திட்டங்களையும், தற்போது எடப்பாடி அரசு கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் நியூட்ரினோ போன்ற பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த நிலையில் தற்போது அந்த திட்டங்கள் அனைத்தையும் எவ்வித எதிர்ப்புமின்றி செயல்படுத்தப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், தற்போது ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்கள் அனைவரும் வடக்கு நோக்கி கும்பிடுபோட்டு பயந்துபோய் ஆட்சி நடத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டியதோடு இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார் டி.டி.வி.தினகரன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran angry about eps ops


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->