8, 9 ம் தேதிகளில் அந்த தவறை செய்துவிடாதீர்.! அரசு ஊழியர்களுக்கு, தமிழக அரசு எச்சரிக்கை.!! அரசு வேலை காலி.!!!
TN GOVT WARN TO TN GOVT STAFF
மத்திய வங்கி ஊழியர் சங்கங்களான ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர் விரோத போக்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8, 9 ஆம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்தியா மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் போன்றவை ஆதரவு அளித்துள்ளது. மற்ற சங்கங்களும் இதுகுறித்து யோசனையில் உள்ளதாக தெரிகிறது. எனவே ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் நடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில், இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த போராட்டத்தால் அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டால், அனைத்து துறை ஊழியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விடுமுறை எடுத்தால் ஊதியம் பிடிக்கப்படும் என்றும், ஒப்பந்த பணியாளர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும் தலைமை செயலர் அந்த எச்சரிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
TN GOVT WARN TO TN GOVT STAFF