#BREAKING தமிழக அரசின் அரசாணை திடீர் ரத்து.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
TN GOVT ORDER 57 I CANCELLED
அரசுப் பள்ளிகளில் சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டருக்கான அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு மதிய சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. அப்படி வழங்கப்படும் முட்டைகளுக்கு பல நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு, அவை அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நிறுவனங்களிடம் இருந்து முட்டை கொள்முதல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை முறையாக இல்லை என்றும், இந்த அரசாணையில் பல்வேறு பாகுபாடு இருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை நடந்து வரும் நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வாழ்த்து மீதான விசாரணை நடைபெற்றது, இதனை விசாரணை செய்த நீதிபதிகள், அரசுப் பள்ளிகளில் சத்துணவு முட்டை கொள்முதல் செய்யும் டெண்டருக்கான அரசாணை 57-ஐ ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
எங்களின் பிற செய்திகள்:
English Summary
TN GOVT ORDER 57 I CANCELLED