#BREAKING சற்றுமுன்: தமிழக அரசு அதிரடி அரசாணை.!! இனி முற்றும் மாறுகிறது.!!
TN GOVT NEW ORDER FOR SCHOOL EDUCATION
கடந்த இரண்டு வருடங்களாகவே தமிழக பள்ளிக்கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
நாட்டில் முதன்மையான பள்ளிக் கல்வியை கொடுக்கும் மாநிலமாக மாற்ற, பல்வேறு அதிரடி முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு ஓரளவுக்கு பலனும் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில்.
சீருடை மாற்றம்,
கல்வி பாடத்திட்டங்கள் மாற்றம்,
தேர்வுகளில் மாற்றம்,
தேர்வு மதிப்பெண்களில் மாற்றம்,
ஆங்கிலவழி போன்ற எண்ணற்ற மாற்றங்கள் தமிழக கல்வித் துறையில், தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
மேலும், தமிழகப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, காலணிகள், இலவச புத்தகங்கள், இலவச புத்தக பை இப்படி எண்ணற்ற பொருட்களை இலவசமாக கொடுத்து, அவர்களின் கல்விக்காக ஊக்கப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு சற்றுமுன் ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 3,4,5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வரும் 2019-20-ம் கல்வியாண்டு முதல், 3,4,5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி தமிழக அரசு இந்த அரசாணையை வெளியீட்டுள்ளது.
English Summary
TN GOVT NEW ORDER FOR SCHOOL EDUCATION