உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு உதவ முடிவு : உடலை தமிழகம் கொண்டு வர ஏற்பாடு...!! - Seithipunal
Seithipunal


உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு உதவ முடிவு : உடலை தமிழகம் கொண்டு வர ஏற்பாடு...!!

டெல்லியில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் குடும்பத்தினருக்கு உதவி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தைச் சேர்ந்த சரத்பிரபு கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்  படிப்பை முடித்து, யு.சி.எம்.எஸ்  மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரி விடுதியில்  நண்பர்களுடன் தங்கியிருந்த சரத் பிரபு இன்று காலை விடுதியின் கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சரத்பிரபு பொட்டாசியம் குளோரைடை செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.சரத்பிரபு உடன் தங்கியிருந்த மாணவர்களுடன் விசாரித்த நிலையில் இந்த தகவலை கூறுவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

ஆனால்,இதற்க்கு மறுப்பு தெரிவித்துள்ள மாணவனின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், எம்.டி., படிப்புக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள சரத்பிரபு, தற்கொலை செய்துகொள்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சந்தேகத்திற்குறிய வகையில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன் சரத்பிரபுவின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், உடலை டெல்லியில் இருந்து திருப்பூர் கொண்டு வரவருதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt assures all assistance will be made


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->