திமுகவில் தொண்டர் முதல் தலைவர் வரை பொய் மட்டுமே பேச தெரியும்.! தமிழக முதல்வர்.!!
tn cm election campaign in thirunelveli
வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தங்களது சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று, சிவங்ககை மக்களவை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், இன்று காலை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
வள்ளியூரில் வாக்குசேகரித்த தமிழக முதல்வர் பேசுகையில், ''தமிழகத்திற்கு நலன் கிடைக்க வேண்டுமானால், மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளின் ஆட்சியே அமைய வேண்டும். நம் நாட்டின் வலிமையை கண்டு எதிரி நாடுகள் முதல் அண்டை நடுகல் வரை அஞ்சும் அளவுக்கு வளர்ச்சியடைய வைத்துள்ள பிரதமர் மோடிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும்'' என்று கூடியிருந்த பொதுமக்களிடம் தனது உரையை ஆற்றினார்.
மேலும், திமுகவில் தலைவர் முதல் திமுகவின் தொண்டர்கள் வரை அனைவருக்குமே பொய் மட்டுமே பேச தெரியும். இவர்களுக்கு பொய்யை தவிர வேறெதுவும் பேசத் தெரியாது என்றும் தமிழக முதலவர் பிரச்சாரத்தின் போது பேசினார்.
English Summary
tn cm election campaign in thirunelveli