தற்போது வரை தமிழகத்தில் பதிவான வாக்குகளின் விபரங்கள்.! தேர்தல் அதிகாரியின் அதிரடி பதில்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள் ஒத்துப்போக கூடிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தீவிர பிரச்சாரத்திலும்., வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நிறைவு பெற்ற நிலையில்., இன்று தேர்தல் வாக்குபதிவிற்கான நாள் ஆகும். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை தொகுதியில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 840 நபர்கள் வேட்பாளர்களாகவும்., 18 தொகுதிக்குகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமார் 277 நபர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டு., காலை சுமார் 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கப்பட்டு மாலை சுமார் 6 மணிவரை வாக்குப்பதிவானது நடைபெறும். வாக்குசாவடி மையத்திற்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையில் ஈடுபட காவல் துறையினர் மற்றும் துணை இராணுவ படையினர் என்று பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

காலை முதலாகவே மக்கள்., இளைஞர்கள்., திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்களின் வாக்குகளை வரிசையில் காத்திருந்து செலுத்தி வருகின்றனர். தற்போது நேரம் 6 மணியை கடந்ததை அடுத்து., வாக்குசீட்டுகள் வழங்கப்பட்ட வாக்காளர்கள் மட்டும் 7 மணி வரை வாக்குகளை அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் தெரிவித்திருந்தார். 

தற்போது வரை மதுரையை தவிர்த்த பிற தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சுமார் 6 மணி வரை பதிவான வாக்குகள் குறித்த தகவல் வெளியாகிள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையத்தை பொறுத்த வரையில்., சுமார் 69.55 விழுக்காடு அளவிற்கான வாக்குப்பதிவுகள் பதிவாகியுள்ளது., 18 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62 விழுக்காடு அளவிற்கு வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருவள்ளூரில் 70.36 விழுக்காடு வாக்குப்பதிவும்., வட சென்னையில் 61.46 விழுக்காடு வாக்குப்பதிவும்., தென்சென்னையில் 58.14 விழுக்காடு  வாக்குப்பதிவும்., மத்திய சென்னையில் 57.05 விழுக்காடு வாக்குப்பதிவும்., காஞ்சிபுரத்தில் 69.52 விழுக்காடு வாக்குப்பதிவும்., கிருஷ்ணகிரியில் 72.79 விழுக்காடு வாக்குப்பதிவும்., திருவண்ணாமலையில் 69.84 விழுக்காடு வாக்குப்பதிவும்., கள்ளக்குறிச்சியில் 75.18 வாக்குப்பதிவும்., நாமக்கல்லில் 78 விழுக்காடு வாக்குப்பதிவும்., மதுரையில் 60.12 விழுக்காடு வாக்குப்பதிவும்., திருப்போரூரில் 81.05 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளது. 

தேர்தல் வாக்குப்பதிவுகளின் முழு முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும்., தற்போதுள்ள சூழ்நிலையில் மறுவாக்குபதிவிற்கு வாய்ப்பில்லை என்றும்., அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்றுள்ளது., வேலூரில் உள்ள கீழ்விஷாரத்தில் கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கி சூடானது நடத்தப்பட்டது என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

till now tamilnadu voting percentage election commission chief speech


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->