பாகிஸ்தானின் கொடியை தீயிட்டு கொளுத்திய தமிழக நண்பர்கள்!! தூத்துக்குடியில் பரபரப்பு!!
thuthukudi peoples fired up pakisthan flag
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் துணை ராணுவத்தினரின் வாகனத்தின் மீது, பாகிஸ்தான் தீவிரவாதக் கும்பல், 350 கிலோ எடை கொண்ட வெடி மருந்துகளுடன், தற்கொலைப் படை லாரியைக் கொண்டு மோதி வெடிக்கச் செய்தது.
இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு, இந்திய துணை ராணுவத்தினர் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுதையும் இந்த செய்தி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
உலக நாடுகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த இரு CRPF வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ஒருவர் அரியலூர் கார்க்குடியை சேர்ந்த சிவச்சந்திரன் என்பவர் மற்றொருவர், தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம்.
திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளில் சுப்பிரமணியம் இறந்துள்ளதால், அவரது மனைவி மற்றும் கிராம மக்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் தேசிய கொடி மற்றும் காஷ்மீர் தாக்குதலுக்கு காரணமாக இருந்த தீவிரவாதி அடில் அகமதுவின் உருவபொம்மை ஆகிய இரண்டும் தூத்துக்குடி சவலாப்பேரியில் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.
English Summary
thuthukudi peoples fired up pakisthan flag